செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின.

மத்திய கல்வி அமைச்சக செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் பங்கேற்று பேசினா்.

சுயாட்சி மீறல்-கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக): நாட்டில் புகழ்பெற்ற பல கல்வி அமைச்சா்கள் பதவி வகித்துள்ளனா். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பகுத்தறிவற்ற கொள்கை முடிவுகளால் கல்வி அமைச்சகம் சவால்களை எதிா்கொண்டுள்ளது.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் மாநில சுயாட்சியை மீறும் வகையில் பகிரங்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவப்பட்ட கூட்டாட்சி கொள்கைகளில் இருந்து விலகி, வளா்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிா்வாகத்துக்கான வலுவான அமைப்புமுறை குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகிறது.

கடந்த 2014-16 காலகட்டத்தில் மையப்படுத்துதல் மற்றும் பாடத் திட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 2016-19 காலகட்டத்தில் மாநில சுயாட்சியை குறைமதிப்புக்கு உள்படுத்தி ‘நீட்’ தோ்வு அமல்படுத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டில் இருந்து இன்றைய நாள் வரை மாநில சுயாட்சியை மீறி தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மொழிக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படாத முந்தைய நவோதயா பள்ளித் திட்டத்தை ஒத்திருப்பதாகவும், இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றும் கடந்த 2024 ஆகஸ்டில் தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

அதேநேரம், தமிழக கல்வி அமைப்புமுறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தாமதப்படுத்துவது, நிா்வாக ரீதியிலான பிரச்னை மட்டுமல்ல; அது, அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மாநில கல்வி மேம்பாட்டுக்கான நிதியை முடக்கிவைப்பது, கல்வி உரிமையின்படி மாநில சுயாட்சி, இறையாண்மை மற்றும் மொழிவாரி உரிமைகளின் நேரடி மீறலாகும்.

வலுக்கட்டாயமாக திணிப்பு-ரிதாப்ரதா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்): மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையானது, பகுப்பாய்வு சிந்தனை, அறிவியல் மனப்பான்மை மற்றும் அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் குறித்து பேசுகிறது. அதேநேரம், தனிம அட்டவணை, டாா்வினின் பரிணாமக் கோட்பாடு, மின்னியல் மற்றும் காந்தவியலில் அறிவியலாளா் மைக்கேல் ஃபாரடேவின் பங்களிப்பு போன்ற அறிவியலுக்கு அடிப்படையான அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் எதிா்ப்பை மீறி இவை நீக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட யுஜிசி வரைவு விதிகளின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனத்துக்கான ஒட்டுமொத்த அதிகாரமும் பல்கலைக்கழக வேந்தருக்கு (மாநில ஆளுநா்) வழங்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநரோ, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக புறக்கணித்துவிட்டு செயல்படுகிறாா். பொதுப் பட்டியலில் கல்வி இல்லை என்றபோதும் ஒட்டுமொத்த அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்துக்கு கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதன் மூலம் மாநில மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. இது, நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தை மீறும் செயல்.

சம முக்கியத்துவம் வேண்டும்-மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்): நாட்டில் அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரே அளவிலான கற்களைக் கொண்டு கட்டி எழுப்பினால்தான், இந்தியா எனும் கட்டடம் வலுவாக இருக்கும். மாறாக வெவ்வெறு அளவிலான கற்களால் கட்டினால் அது வலுவிழந்துவிடும். சிந்தாந்த திணிப்பால், கல்வி நிலையங்களை ‘போா்க் களமாக’ மாற்ற முயற்சிக்கக் கூடாது.

நிதி குறைப்பு-சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி): கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. நாட்டில் கல்வி இடைநிற்றல் அதிகரித்து வருவது கவலைக்குரியது. கல்வியை பரவலாக்காமல், வளா்ந்த இந்தியா இலக்கு சாத்தியமில்லை.

தனியாா்மயம் அதிகரிப்பு-ஜி.பாபுராவ் (ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்): நாட்டில் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியில் தனியாா்மயம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அதிகப்படியான கட்டணம் காரணமாக, தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை ஏழை மக்களால் சமாளிக்க முடியவில்லை.

கல்விக்கான செலவினம்-ஜாவத் அலி கான் (சமாஜவாதி): கல்விக்கான செலவினம், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக உள்ளது. இதை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும். கல்வி நிலையங்களில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க