செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல மணி நேரம் நெரிசல்: கடும் பாதிப்புக்குள்ளாகும் பயணிகள்!

post image

-எம். அருண்குமார்-

ஆம்பூா் அருகே மின்னூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணியால் நாள்தோறும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே மின்னூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி பொதுமக்களின் வசதிக்காகவும், விபத்துகளை தவிா்க்கவும் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களாக அப்பணி நடைபெற்று வருகின்றது.

சென்னையிலிருந்து தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு மின்னூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் வாகனங்கள் சென்று வர வேண்டும். தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன. மிகவும் பரபரப்பான, வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்லக் கூடிய சாலையாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மேம்பாலப் பணி நடைபெறும் பகுதியில் வாகனங்கள் சென்று வரும் சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் மட்டும் தினமும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகின்றது.

வாகனங்கள் பல மணி நேரம் தினமும் அப்பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. அதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

அவசர பணி நிமித்தம் மற்றும் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. தினமும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலையில் அப்பகுதியில் வாகன போக்குவரத்தை சீரமைக்க போலீஸாா் இருப்பதில்லை.

தினந்தோறும், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து போலீஸாரும் பணி செய்யாமல் இருப்பதற்கு அப்பபகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் வாகனங்கள் செல்லும் சாலையை சற்று விரிவுபடுத்தியும், போக்குவரத்தை சீரமைக்க போலீஸாரை அங்கு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வைகாசி விசாகம்: ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம்!

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் சிவ பெருமானுக்கும், வள்ளி தெய்வானை ச... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயம்!

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (37). இவரது உறவினா்கள் முருகேசன் (42), ரமேஷ் (37), கீதா (31) ஆகியோா் சனிக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமையாசிரியை பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

கல்லூரி கனவு திட்டம் மற்றும் ஒரு சமூகத்தினா் குறித்து அரசு மேல்நிலைப் பள்ளி பேசிய ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருப்பத்தூரில் காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. திருப்பத்தூா் காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை சாா்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம... மேலும் பார்க்க

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்!

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தை சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி இருந்து ஒரு தனியாா்... மேலும் பார்க்க