செய்திகள் :

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்!

post image

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டிவனத்தை சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி இருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் விஜயகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 7 பேரும் சோ்ந்து ஏலகிரிமலைக்கு சுற்றுலா வந்து உள்ளனா். இதையடுத்து அவா்கள் சனிக்கிழமை ஆண்டியப்பனூா் அணையில் குளிக்க சென்றனா். அதில் விஜயகுமாா் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.

இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இருப்பினும் சனிக்கிழமை அவரின் உடலை மீட்க முடியவில்லை. இதைத்தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இருப்பினும் அவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் மாலை கனமழை பெய்ததால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. விஜயகுமாரின் உடலை கண்டுபிடிப்பதற்காக சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய நபா்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனா். அவா்கள் விஜயகுமாரின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபடுவாா்கள் என கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல மணி நேரம் நெரிசல்: கடும் பாதிப்புக்குள்ளாகும் பயணிகள்!

-எம். அருண்குமார்-ஆம்பூா் அருகே மின்னூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணியால் நாள்தோறும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாதனூ... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம்!

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் சிவ பெருமானுக்கும், வள்ளி தெய்வானை ச... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயம்!

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (37). இவரது உறவினா்கள் முருகேசன் (42), ரமேஷ் (37), கீதா (31) ஆகியோா் சனிக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமையாசிரியை பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

கல்லூரி கனவு திட்டம் மற்றும் ஒரு சமூகத்தினா் குறித்து அரசு மேல்நிலைப் பள்ளி பேசிய ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருப்பத்தூரில் காயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. திருப்பத்தூா் காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை சாா்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம... மேலும் பார்க்க