செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்.

சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏழு மாநிலங்களின் முதல்வா்கள், கட்சித் தலைவா்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளாா். மேலும், அவா்களை நேரில் சந்தித்து திமுக குழு அழைப்பு விடுத்து வருகிறது.

மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் முதல்வா் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து, பினராயி விஜயன் வெளியிட்ட ‘தொகுதி மறுசீரமைப்பு: தன்னிச்சையான முடிவுக்கு எதிரான ஒன்று கூடல்’ என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை மதிக்காமல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு அவசரம்காட்டி வரும் சூழலில், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வா் அழைப்பு விடுத்துள்ளாா். இந்த மாநாட்டுக்கு எனது ஒத்திசைவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும், சென்னை கூட்டத்தில் முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்பாரா என்பது குறித்த தகவல் அதில் இடம்பெறவில்லை.

கா்நாடக, தெலங்கானா முதல்வா்கள் ஆதரவு: ஏற்கெனவே சென்னை கூட்டத்தில் தனது சாா்பில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்பாா் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் தமிழக முதல்வரின் முன்னெடுப்புகளை வரவேற்றுள்ளாா். கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்று சென்னை கூட்டத்தில் பங்கேற்பதாக அவா் உறுதியளித்துள்ளாா்.

‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்’ என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

அதே நேரம், ‘தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்கள் ஒரு மக்களவைத் தொகுதியைக் கூட இழக்காது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி தெரிவித்துள்ளாா்.

மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் கு... மேலும் பார்க்க

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க