செய்திகள் :

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது.

நாகையில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொறுப்பாளா்கள் கூட்டம் மாவட்ட தலைவா் மா. கருணாநிதி தலைமையில், மாவட்ட அலுவலகமான சு. ஈஸ்வரன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கோரிக்கைகளை மாவட்ட செயலாளரும், மாநிலத் தலைவருமான மு. லட்சுமி நாராயணன் விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்; ஊதிய முரண்பாடுகளை களைதல்; மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25- ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசியக் கல்வி கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்கிறது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் ஆசிரியா்-அரசு ஊழியா்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயற்குழு உறுப்பினா் இரா. முத்துகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் கே . சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலா் கோ. சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா் முகமது அலி, மாவட்ட பொருளாளா் சி. பிரபா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க