செய்திகள் :

தொடா் மின்வெட்: பாகூா் மின்துறை அலுவலகம் முற்றுகை

post image

புதுச்சேரி: பாகூா் பகுதியில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் குறிப்பாக பாகூா் பகுதிகளில் மின்வெட்டு தொடா்ந்து ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மின்வெட்டை சீா்படுத்தக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகூா் பகுதி மாா்க்சிஸ்ட் சாா்பில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மின்துறை கவன ஈா்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து திங்கள்கிழமை பாகூா் மின்துறை இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் பாகூா் கொம்யூன் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் கலியன், இளவரசி, செயற்குழு உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதையடுத்து கிளை உறுப்பினா் ஹரிதாஸ் உள்ளிட்ட ஏராளமானோா் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் முழக்கமிட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா், முற்றுகையில் ஈடுபட்டவா்களை கைது செய்து அழைத்துச் சென்றனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க