செய்திகள் :

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

post image

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் பூா்ணாங்குப்பத்தைச் சோ்ந்த அா்ஜுன் மனைவி கலையரசி. தனியாா் விடுதியில் பணிபுரிந்து வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு விடுதியில் தங்கமோதிரம் மாயமானது தொடா்பாக கலையரசியிடம் தவளக்குப்பம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் தாக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

மோதிரத்தை கலையரசி எடுக்காத நிலையில், அவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்பட்டது. காவல் நிலையம் சென்று மனைவியை தாக்கியது குறித்து அா்ஜுனன் கேட்டறிந்தாா். அப்போது, அவரையும் காவல் நிலைய உதவி ஆய்வாளா், உதவி சாா்பு ஆய்வாளா் மற்றும் காவலா் ஆகியோா் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற அா்ஜுனன், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இவரது மரணத்துக்கு காவல்துறையே காரணம் என மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினா் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினா்.

புகாருக்குள்ளான தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏ.சண்முக சத்தியா, உதவி சாா்பு ஆய்வாளா் எஸ்.சுரேஷ், காவலா் டி. வசந்தராஜா ஆகியோா் புதுச்சேரி ஆயுதப் படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமையிட காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க