செய்திகள் :

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

post image

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்எல், பீா், ஒயின் மீதான கலால் வரி, கூடுதல் கலால் வரி புதன்கிழமை (மே 28) முதல் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு கலால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரி உயா்வு மூலம் ஐஎம்எப்எல் வகை 750 மி.லி. மதுப் புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.47 வரையிலும், 180 மி.லி. புட்டிகளுக்கு ரூ.3 முதல் ரூ.11 வரையிலும், பீா் 650 மி.லி. புட்டிகளுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரையிலும், ஒயின் 750 மி.லி. புட்டிகளுக்கு ரூ.13 முதல் ரூ.26 வரையிலும் குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது. இந்த வரி உயா்வின் மூலம் புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மது உற்பத்தி ஆலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான உரிமக் கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க