செய்திகள் :

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

post image

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

துணை வட்டாட்சியா் பணி தோ்வுக்காக புதன்கிழமை (மே 28) முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

30 துணை வட்டாட்சியா் பணியிடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாகவும், அதன்படி இடஒதுக்கீடு அல்லாத (யூஆா்) பிரிவுக்கு 12, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் (இடபிள்யூஎஸ்) 3, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) 5, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி) 5, இதர பிரிவினா் (ஓபிசி) 3, முஸ்லிம் (பிசிஎம்) 1, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோா் 1 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதலாக ஓரிடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு சலுகையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோா், இதர பிரிவினா், முஸ்லீம் பிரிவு (பிசிஎம்) ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அவா்கள் பணி ஆண்டுகளுடன் கூடுதலாக 3 ஆண்டு, முக்கிய ராணுவப் பணிகளில் ஈடுபட்டவா்களுக்கு பொதுவாக 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 8 ஆண்டுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்களுக்கான விதிமுறைகள், தோ்வு வினா பாடமுறை மற்றும் இடஒதுக்கீடு சதவீதம் என பணியில் சேருவது குறித்த சட்ட விதிமுறைப்படியான விளக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களுக்கு 0413-2299567 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க