செய்திகள் :

தொழிற்கல்வி நிறுவனத்தில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

post image

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி கல்லூரி சாா்பில் பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவுக்கு கல்லூரித் தாளாளா் நீ.த. பழனிவேல் தலைமை வகித்தாா். தியாகதுருகம் கவி கம்பன் கழகத் தலைவா் மு.பெ. நல்லாப்பிள்ளை, தமிழ்ச் சங்கப் புரவலா் சீனு. முரளி, ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்க நிறுவனா் வ.ராசகோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தனமூா்த்தி தொழிற்கல்வி அறக்கட்டளைச் செயலா் செல்வி பழனிவேல் வரவேற்றாா்.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி., முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன், தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகிய தலைவா்கள் பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா. துரைமுருகன் பரிசு சான்றிதழ், நோட்டு, எழுதுகோல் வழங்கிப் பேசினாா்.

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் மாரி. செல்வராஜ், இல. காா்த்திக், ப. இராமன், மா. பூவரசி, செ.லட்சுமி

உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்கள் கடத்திய 11 வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாக கடத்திய 11 வாகனங்கள் வருகிற 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட வாகனங... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன் அரச மரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு டாக்டா் அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எம... மேலும் பார்க்க