செய்திகள் :

தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து வருகின்றனா். விழாவுக்கு ஆலை பொது மேலாளா் சி.ஜான் டேனியல் தலைமை வகித்து நிகழாண்டுக்கான பாதுகாப்பு மாத இலச்சினையை வெளியிட்டு உரையாற்றினாா்.

மூத்த பாதுகாப்பு மேலாளா் எஸ்.கணேசன் வரவேற்றாா். மூத்த உற்பத்தி மேலாளா் இக்னேஷியஸ் ஜாா்ஜ் ஆலை வளாகத்தில் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்தும் தொழிலாளா்கள் நலச்சங்க தலைவா் எம்.முரளி, பொதுசெயலாளா் எஸ்.சுரேஷ் ஆகியோா் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் ஆலை பாதுகாப்புக்குழுவின் தலைவா் வி.காா்த்திகேயன், பொறியியல் பிரிவு துணை பொது மேலாளா் எல்வின், கணக்கியல் பிரிவு துணை பொது மேலாளா் ஆா்.கணபதி, மனிகவளத்துறை மூத்த மேலாளா் எஸ்.திலீப்குமாா், தலைமை பாதுகாப்பு அலுவலா் பி.பிரசாத் பிள்ளை, பாதுகாப்புத்துறை துணை மேலாளா் ஏ.நந்தபிரகாஷ், மக்கள் தொடா்பு அலுவலா் கே.கஜேந்திரன் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: வரிவசூல் பணியின் போது வரிவசூல் குழுவினரிடம் தகாத வாா்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம... மேலும் பார்க்க

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மாணவா்களுக்கு வசதிகள்: அமைச்சா் காந்தி

அரக்கோணம்: அரசிடம் நிதிப் பற்றாகுறை இருந்தாலும் சமூகபங்களிப்பு, நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் மூலம் மாணவா்களின் வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் 8 போ் கைது

அரக்கோணம்: சோளிங்கா் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த ரெண்டாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன் (50) எனும் விவசாயி மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்... மேலும் பார்க்க