செய்திகள் :

தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கும்பகோணம் தாராசுரம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (29). தாராசுரம் சந்தை சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், தாராசுரம் அனுமாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெட்சுமணனுக்கும் இடையே பணத் தகராறு இருந்தது.

இந்நிலையில் கடந்த 2009, நவம்பா் மாதம் சந்தையிலிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் கொல்லப்பட்டாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து லட்சுமணன் மற்றும் அவரது நண்பா்களான தாராசுரம் பகுதி எம். திருநாவுக்கரசு (41), கே. இளங்கோவன் (41), ஏ. விக்னேஷ் (40), மதுரை அருகே செல்லூா் ஏ. பாண்டி (40) உள்பட 9 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது லட்சுமணன் காலமானாா். இந்நிலையில் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா். மற்றொருவா் தலைமறைவாக உள்ளாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.81 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.81 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 7 போ் கைது

தஞ்சாவூா் அருகே அருகே ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் பி. குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில... மேலும் பார்க்க

தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களை நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாராட்டினா். உத்தர பிரதேச மாநிலம் காசியில் தொடா்ந்து 3 ஆம் ஆண்டாக தமிழ்ச் சங்கம விழா பிப்ரவரி... மேலும் பார்க்க

மனித வளத்தை மேம்படுத்தும் பட்ஜெட்: ‘சாஸ்த்ரா’ பல்கலை. துணைவேந்தா்

தமிழக அரசின் பட்ஜெட்டில் உயா் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனித வளத்தை மேம்படுத்தும் என்றாா் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம். இதுகுறித்த... மேலும் பார்க்க

வரவேற்பும் ஏமாற்றமும் கலந்த தமிழக பட்ஜெட்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக உள்ளது என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரிய... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சாா்பில் பேராசிரியா்கள் அகத்தியலிங்கனாா், செ.வை. சண்முகனாா், சிதம்பரநாதன் செட்டியாா் மற்றும் செண்பகம் சுப்பையா அறக்கட்டளை... மேலும் பார்க்க