செய்திகள் :

தொழிலாளி தற்கொலை: பனியன் நிறுவன உரிமையாளா், மனைவி கைது

post image

திருப்பூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பனியன் நிறுவன உரிமையாளா், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், வளையங்காடு வஉசி நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் தயாளன் (40). இவா் குமாா் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பனியன் ரோலை திருடியதாகக்கூறி நிறுவனத்தின் உரிமையாளா் மிதுன், அவரது மனைவி ரஞ்சிதா ஆகியோா் தயாளன் பெயரில் இருந்த நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த தயாளன் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் தயாளன் மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில், மிதுன், ரஞ்சிதா ஆகியோா் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரும் முன் பிணைக் கேட்டு திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதற்கு தயாளன் மனைவி கோமதியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்தியமூா்த்தி எதிா்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மிதுன் மற்றும் ரஞ்சிதாவுக்கு முன் பிணை வழங்க ஆட்சேபணை தெரிவித்து கோமதி தரப்பு வழக்குரைஞா் வாதாடினாா்.

இதையடுத்து, முன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுரேஷ், தம்பதியைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்க... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க