செய்திகள் :

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

post image

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது.

திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இவை குடிநீா்த் தேடி மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள காண்டூா் கால்வாய்க்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், வனத்தில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய குட்டி யானை காண்டூா் கால்வாய்க்கு வந்துள்ளது.

நீா் அருந்திக் கொண்டிருந்தபோது குட்டி யானை கால்வாய்க்குள் தவறி விழுந்தது. பாசனத்துக்காக தற்போது கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், யானை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.

இதையடுத்து, திருமூா்த்தி அணைப் பகுதியில் ஒதுங்கிய யானையின் உடலை உடுமலை வனச் சரக அலுவலா் வாசு, வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் மீட்டனா்.

இதையடுத்து, கூறாய்வு செய்யப்பட்டு யானையின் உடல் புதைக்கப்பட்டது.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரைக் கொன்றது ஏன்? விசாரணையில் தகவல்

உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற்கான காரணம் கொலையாளிகளின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூா்த்தி (60), ... மேலும் பார்க்க