செய்திகள் :

உதவி ஆய்வாளரைக் கொன்றது ஏன்? விசாரணையில் தகவல்

post image

உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற்கான காரணம் கொலையாளிகளின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூா்த்தி (60), அவரது மகன்கள் தங்கப்பாண்டி (25), மணிகண்டன் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில், விசாரணையின்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

மூா்த்தி, தங்கப்பாண்டியன் ஆகியோா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கொலையாளிகளின் வாக்குமூலம் குறித்து போலீஸாா் கூறியதாவது: தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோா் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால், இருவரும் தலைமறைவாகி தந்தை மூா்த்தி உடுமலையில் தங்கி பணியாற்றி வந்த தோட்டத்துக்கு வந்துள்ளனா். இருவரும் அங்கேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை, மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல், காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தபோது தாங்கள் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்கு தெரிந்துவிட்டால் சிக்கிக்கொள்வோம் என பயந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனா் என்றனா்.

சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர எதிா்ப்பு: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூா் கிராமத்துக்கு சடலத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், திருப்பூா் மின் மயானத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்க... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க