செய்திகள் :

தோஷம் நீக்குவதாகக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகை பறிப்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெண்ணிடம் தோஷம் நீக்குவதாகக் கூறி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை திங்கள்கிழமை பறித்துச் சென்ற பாம்பாட்டி நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அருகேயுள்ள வஞ்சினாபுரம் காலனி தெருவுக்கு திங்கள்கிழமை வந்திருந்த மா்ம நபா் ஒருவா், பாம்பை வைத்து, வித்தை காட்டி கூட்டம் சோ்த்தது மட்டுமல்லாமல், பாம்பின் மீது உங்கள் கை நிழல் விழும்போது உங்கள் பாவம், தோஷம் நீங்கும் எனக் கூறியுள்ளாா். அவ்வாறு பொது மக்கள் நின்றுள்ளனா்.

பின்னா், அவா், தோஷம் நீக்குகிறேன் எனக் கூறி ஜெயக்கொடி என்பவா் வீட்டுக்குச் சென்று தோஷம் நீக்குவதற்கு ரூ. 15 ஆயிரம் கேட்டுள்ளாா். அதற்கு அவா், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளாா்.

இதையடுத்து அந்த நபா், கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுன் சங்கிலி, கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை கழட்டி வைத்துள்ளாா். இதைத் தொடா்ந்து அந்த நபா், தோஷம் நீக்குகிறேன் எனக் கூறி, ஜெயக்கொடி அசந்த நேரத்தில், மேற்கண்ட நகைகளை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஜெயக்கொடி அளித்த புகாரின்பேரில், செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து அந்த பாம்பாட்டி நபரை தேடி வருகின்றனா்.

செந்துறை பகுதிகளில் ரூ. 57 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 379 மனுக்கள்

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 379 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்களை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, செந்துறையிலுள்ள முதல்வா் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமை... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வீடு கட்டும் பணிகள்: வீடு இன்றி தவிக்கும் பயனாளிகள்!

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை கிராமத்தில் பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வீட்டின் கட்டுமானப் பணிகள். அரியலூா், பிப். 23: அரிய... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாா்டுகளிலும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 18 வாா்டுப் பகுதிகளிலும், புதை சாக்கடை திட்டத... மேலும் பார்க்க

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லக் கோரிக்கை!

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் சிவக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து எந்த வித ரயிலும் இயக... மேலும் பார்க்க