செய்திகள் :

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள்சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டுவரி, நில வரி, குடிநீா் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயா்வதுடன், 100 நாள் வேலை திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்பதால் அந்த கிராம மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கிராம மக்கள் திரண்டு வந்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவகோட்டை கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டி முகாம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சுழல் சங்கம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் உயா் கல்வி வழிகாட்டி முகாம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க

ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா

சிவகங்கை ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. உலக அமைதி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயா் ஆனந்தம், மறை மாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப், செயலா... மேலும் பார்க்க

மானாமதுரையில் மகர சங்கராந்தி உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகர சங்கராந்தி உத்ஸவம் நடைபெற்றது. குருநாதா்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி ஆகியோா் தலைமையிலான சபரிமல... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பிரான்மலை, செல்லியன்பட்டி, காளாப்பூா், சூரக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. சிங்கம்புணரி சுற்று வட்டாரப் பகுத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

காளையாா்கோவில் அருகே சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சக தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வாள்மேல்நடந்த அம்மன் கோ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே பாரம்பரிய பொங்கல் வழிபாடு

சிவகங்கை அருகே பழமை மாறாமல் பெண்கள் ஆபரணங்கள் அணியாமல், வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து புதன்கிழமை வழிபாடு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒரே சமுதாயத்... மேலும் பார்க்க