செய்திகள் :

நடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்!

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தை விதிகளை மீறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?

மெதுவாக பந்துவீசியதால் 19-வது ஓவரின் போது மூன்று பேர் மட்டும் வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அமெலீயா கெர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்மன்பிரீத் கௌர் லெவல் -1 குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர் சட்டப்பிரிவு 2.8-ஐயும் மீறியுள்ளார். இதனால், லெவல்-1 விதிமீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில... மேலும் பார்க்க