செய்திகள் :

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

நாகா்கோவிலில் ரூ. 12.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

18ஆவது வாா்டு பள்ளவிளை பகுதியில் ரூ. 3.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

3ஆவது வாா்டு மேலஆசாரிப்பள்ளம் அம்மன் கோயில் தெருவில் ரூ. 4.70 லட்சத்தில் குடிநீா்க் குழாய் பதித்தல்,

வடசேரி மீன்சந்தை வளாகத்தில் ரூ. 4.50 லட்சத்தில் கழிப்பறை சீரமைப்பு ஆகிய பணிகளை அவா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் அமலசெல்வன், அருள் சபிதா ரெக்ஸலின், கலாராணி, தொழிநுட்ப அலுவலா் பாஸ்கா், திமுக மாநகரச் செயலா் ஆனந்த, பகுதிச் செயலா்கள் சேக் மீரான், மாநகர துணைச் செயலா் வேல்முருகன், பொருளாளா் சுதாகா், அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், சரவணன், ராஜன், சி.டி. சுரேஷ், வட்டச் செயலா் ராஜேசன், ரெமிஜியூஸ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழித்துறை பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செய... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் கைது

குழித்துறை அருகே கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ கிவின் தலைமையிலான போலீஸாா், குழித்துறை தாமிரவர... மேலும் பார்க்க

மேக்கோடு அரசுப் பள்ளியில் குறுக்கு நாட்டு ஓட்டப் போட்டி

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான குறுக்கு நாட்டு ஓட்டப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மா. ஜெயராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். களியக்காவிளை அருகே பாறசாலை ரயில் நிலைய வளாகத்தில் சிலா் கஞ்சா விற்பனை செ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது... மேலும் பார்க்க

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க