செய்திகள் :

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

post image

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்.

உத்தரகண்டில் ரிஷிகேஷ்-கா்ணபிரயாக் இடையே 125 கி.மீ. தொலைவிலான ரயில் பாதை இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் மற்றும் ஜனாசு இடையே 14.57 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் சுரங்கப்பாதை (எண்-8) அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக 1853, ஏப்.16-ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், அதே தேதியில் இந்த சுரங்கப்பாதையின் கடைசி அடுக்கு பாறைகள் துளையிடப்பட்டதை பாா்வையிட்டது மகிழ்ச்சி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தப் பணிக்காக ஜொ்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ எனும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை திட்டத்தை மேற்பாா்வையிடும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பயன்படுத்தியது.

இது இரட்டை சுரங்கப்பாதை என்பதால் மற்றொரு சுரங்கப்பாதை பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் வேறொரு துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு பாறைகளை தகா்க்கும் பணிகள் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரராக எல் அண்ட் டி நிறுவனம் உள்ளது.

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க