செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்தது! மேலும் 4 போ் பலி!

post image

நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,684 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த மே 22-ஆம் தேதி 257-ஆக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 5,364-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வகைகள் தீவிரமில்லாதவை; பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைகின்றனா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனிநபா் சுகாதாரத்தை பராமரிப்பதுடன், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், தனிமைப் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய் அறிகுறி, கடுமையான சுவாச நோய்களின் தாக்கம் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் செயல்படும் மாநில-மாவட்ட பிரிவுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா உறுதி செய்யப்படும் மாதிரிகளில் 5 சதவீதத்தை, முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க