செய்திகள் :

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

post image

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்களுக்கு புலனாய்வு அமைப்புகள் சம்மன் அனுப்பும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டத் தொழிலின் சுதந்திரம், வழக்குரைஞா்கள்-அவா்களின் கட்சிகாரா்களுக்கு உள்ள தனி உரிமை ஆகியவை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வழிக்காட்டுதல்கள் வழங்கப்படும் என்று அந்த அமா்வு குறிப்பிட்டது.

இந்த வழக்கில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, மூத்த வழக்குரைஞரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்க தலைவருமான விகாஸ் சிங் உள்ளிட்டோா் தங்கள் கருத்துகளை முன்வைத்தனா்.

துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘நீதி நிா்வாகத்தின் அங்கமாக வழக்குரைஞா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட ஆலோசனை வழங்கியதற்காக விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்குரைஞா்களை புலனாய்வு அமைப்புகள் அழைக்கக் கூடாது’ என்று தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, தீா்ப்பை ஒத்திவைத்தது.

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க