செய்திகள் :

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

post image

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.

2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. வரை சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றத்துக்கான மாநாடு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 3 - 4 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இணை அமைச்சர் அஜய் தம்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையானது நீடித்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சர் அஜய் தம்தா பேசியதாவது,

சுதந்திரமான ஆய்வுக் கூடங்கள், வழக்கமான தணிக்கைகளால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் மூலம் சாலை தரத்தை மேம்படுத்தும் பணிகளை அமைச்சகம் செய்து வருகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 3 ஜி - யின் படி, சாலை அமைப்பதற்கு நிலங்களை வழங்கியவர்களுக்கு 90% இழப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளின் தரமும் ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளும் பரந்த ஆய்வின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தில்லி - மீரட், கிழக்கு புறவசி விரைவுச் சாலை, அகமதாபாத் - வதோதாரா நெடுஞ்சாலை என 8,391 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2,242 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உள்பட 5,109 கி.மீ. விரைவுச் சாலைகள் அடங்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

India builds 10,660 Km of highways in FY25, Eyes Rs 3 trillion push, Road Minister Ajay Tamta

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க