செய்திகள் :

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

post image

மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சியைக் கலைத்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல் அந்நாட்டை ராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது. இதனால், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மத்திய சாகாயிங் மாகாணத்தில், மண்டாலாய் நகரத்தின் அருகில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியார்களுக்கும் இடையில் கடந்த ஆக.11 ஆம் தேதியன்று கடும் மோதல் வெடித்துள்ளது.

இருதரப்புக்கும் இடையிலான மோதலின்போது தாவுங் யின் எனும் கிராமத்தின் அருகில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வந்த குழுவின் வாகனம் தாக்குதல்கள் நடைபெற்ற பகுதியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், நிவாரணக் குழுவின் வாகனமும் சிக்கி வெடித்து சிதறியதில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 8 பேரில் ராணுவ அரசுக்கு எதிராகச் சண்டையிட்ட கிளர்ச்சியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ராணுவ அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, உள்நாட்டுப் போரினால் மியான்மரில் சுமார் 35 லட்சம் மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் டிசம்பரில் மியான்மர் நாட்டின் தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு அறிவித்திருந்தது. இந்தத் தேர்தலானது ராணுவ அரசை சட்டப்பூர்வமாக நீட்டிப்பதற்கான திட்டம் எனக் கூறி அதனை புறக்கணிக்கப் போவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

Eight members of a relief team have been killed in airstrikes between Myanmar military government forces and local rebels, it has been reported.

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், 4 நாள்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோப் மாவட்டத்தின், சம்பாஸா பகுதியில் பதுங்கி செய... மேலும் பார்க்க

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க