செய்திகள் :

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

post image

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது. ஹேஸ்டிங்ஸ் நகருக்கு தெற்கு 20 கிமீ தொலைவில் ஹாக்ஸ் விரிகுடா பகுதியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை சுமார் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தெரிவிக்கின்றது.

ஹாக்ஸ் விரிகுடா நியூசிலாந்தின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். முன்னதாக 1931இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 256 பேர் கொல்லப்பட்டனர்.

50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்து, "நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ளது, இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவாகும்.

A magnitude 4.9 earthquake struck New Zealand's lower North Island Wednesday, with a jolt rated as moderate by the country's geological sciences agency.

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இர... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதிட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு

வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஹசீனா தரப்புக்கு ... மேலும் பார்க்க

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய்... மேலும் பார்க்க