செய்திகள் :

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

post image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை வரும் ஆக.21 ஆம் தேதி நேரில் சந்தித்து உரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தச் சந்திப்பானது மாஸ்கோவில் நடைபெறும் எனவும், இதில் சர்வதேச கட்டமைப்புகளுக்கு உட்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ரஷியா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் அதிபர் விளாதிமீர் புதின், துணை பிரதமர் டெனிஸ் மண்டுரோவ் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜெய் ஷொய்கோ ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

It has been reported that External Affairs Minister S. Jaishankar will meet and hold talks with the Russian Foreign Minister on August 21.

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க