செய்திகள் :

நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், வசூல் ராஜா மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் நிலைதடுமாறிய அவர், கீழே சரிந்தார். நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் ரௌடி வசூல் ராஜா, தலை, முகம் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் வசூல் ராஜாவின் கூட்டாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

வசூல் ராஜா

இந்தச் சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரௌடி வசூல் ராஜாவின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரௌடி வசூல் ராஜாவை கொலை செய்த கும்பலை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடிவருகிறார்கள்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா மீது 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன. இவருக்கு எதிரிகள் அதிகம். அதனால் என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி-க்களை ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் ... மேலும் பார்க்க

PAK Train Hijack: ``155 பேர் மீட்பு, 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..'' - பாகிஸ்தான் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானால் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் பலூச் விடுதலை படை (Baloch Liberation Army - BLA), தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் ... மேலும் பார்க்க

வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆற... மேலும் பார்க்க

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க