செய்திகள் :

தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குறுந்தையன் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து, காரில் இருந்து அரிவாளுடன் இறங்கிய மர்ம நபர்கள் குறுந்தையனின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

கொலை செய்யப்பட்ட குறுந்தையன்

தப்பித்து ஓட முடியாமல், குறுந்தையன் அலறியிருக்கிறார். அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததுடன் வெட்டிய மர்ம நபர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இதில் வெட்டிய கும்பலில் ஒருவர் கீழே விழுந்துவிட அவரை பொதுமக்கள் பிடித்தனர். மற்றவர்கள் காரில் தப்பிச் சென்று விட்டனர். பட்டப்பகலில் சினிமாவை விஞ்சும் விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்து முடிந்தது. இந்நிலையில் குறுந்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தக் கொலை குறித்து, தமிழ் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர், புதுச்சேரி, ஆரோவில் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38) என்பது தெரியவந்தது. இக்கொலைச் சம்பவத்தில், ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், குறுந்தையன் நடவடிக்கைகளை வேவு பார்த்து கொலை செய்ததாகவும் வடிவேல் போலீஸிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``குறுந்தையன் கடந்த 2013ம் ஆண்டில் உலகநாதன் என்பவரையும், 2014ல் உதயா என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். தமிழ் பல்கலைக்கழக போலீஸாரின் ரௌடி பட்டியலில், குறுந்தையன் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குறுந்தையன் செய்த கொலைக்குப் பழிக்குப் பழியாக காத்திருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைக் கொலைசெய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து வருகிறது. தப்பியவர்கள் பிடிப்பட்ட பிறகு முழு விபரம் தெரிய வரும்" என்றனர்.

நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிர... மேலும் பார்க்க

வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆற... மேலும் பார்க்க

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க