"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி
காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ஒன்று கூடத் தான் வழங்கியதல்ல எல்லாம் முருகன் வழங்கியது எனவும் பேசி இருக்கிறார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
“28 ஆண்டுகள் நான் நீதிபதியாக இருந்திருக்கிறேன். அந்த நீதிமன்றத்தில் ஒரு லட்சம் தீர்ப்புகள் வழங்கி இருக்கிறேன். இதில் ஒரு தீர்ப்புகூட நான் சத்தியமாகக் கூறவில்லை. எல்லாம் முருகன் கூறியதுதான். சொன்ன தீர்ப்பு எல்லாம் அவர் சொன்னது. நான் சொன்னது அல்ல. சத்தியம்தான் நிற்கும் நேர்மைதான் நிற்கும்.
முருகா முருகா என்றால் முருகன் வர மாட்டார். எங்கு நேர்மை இருக்கிறதோ அங்குதான் வருவார். பக்திக்கு வயது இல்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் பக்தி வரும். பக்திக்குப் பலன் உண்டு. அதேபோல் தர்மத்திற்கும் பலன் உண்டு” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs