செய்திகள் :

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்த 29-ம் தேதி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட யூடியூபர் திவ்யா, கார்த்திக், ஆனந்த்ராமன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

கோர்ட்

இந்த நிலையில், யூடியூபர் திவ்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோடிமுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, நடந்த விஷயம் வேறு, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வேறு. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப்போல திவ்யா கள்ளச்சியும், கார்த்தியும் சேர்ந்து அந்த வீடியோவை எடுக்கவில்லை. வழக்கில் மூன்றாம் எதிரியாக குற்றம்சட்டப்பட்டுள்ள சித்ராதான், யூடியூப் பிரபலங்களாக இருப்பவர்களிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து ஆட்களை செட் செய்து வீடியோவை எடுத்துள்ளார். வீடியோவில் இருப்பதை உண்மை புலனாய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தால் இந்த வழக்கிற்கும் திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இல்லை என தெரியவரும். அதுபோல் முறையாக விசாரணைக்கு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்" என கூறினார்.

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து

"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: ``அறிவியல் பூர்வமாக ஆய்வு... சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல'' -தமிழக அரசு விளக்கம்!

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா மாணவி வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க மே.வங்க அரசு மேல்முறையீடு

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்குத் தண்டனை விதித்திருக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கட... மேலும் பார்க்க