ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
கொல்கத்தா மாணவி வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க மே.வங்க அரசு மேல்முறையீடு
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்குத் தண்டனை விதித்திருக்கிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிந்தது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் கடந்த திங்கள் கிழமை வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அந்தவகையில் நேற்று ( ஜனவரி 20) நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும், சாகும் வரையில் சிறை எனும் ஆயுட்காலத் தண்டனையும் வழங்கியிருந்தது. மரண தண்டனை வழங்காமல் தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்ற உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.