செய்திகள் :

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கனகராஜும் அதே பகுதியைச் சேர்ந்த வர்சினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

வர்சினி பிரியா கனகராஜ்

ஆனால் வர்சினி பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களுக்கு கனகராஜின் அப்பா கருப்பசாமி திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். சில நாள்கள் ஒன்றாக இருந்த நிலையில் கனகராஜின் சொந்த அண்ணன் வினோத்குமார் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2019 ஜூன் மாதம் 28-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு  சென்ற வினோத்,

வினோத் குமார்

சாதிய ரீதியாக தகாத வார்த்தைகளில் திட்டி கனகராஜ் மற்றும் வர்சினியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை ஆணவ படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த வழக்கின் விசாரணை கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நீதிபதி விவேகானந்தன், வினோத்குமார் தான் வழக்கின் முக்கிய குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினோத் குமார்

இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி விவேகானந்தன் அதிரடி உத்தரவிட்டார். “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ப.பா. மோகன் வரவேற்றுள்ளார்.

Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?

ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது... எனது' என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. விருது யாரு... மேலும் பார்க்க

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப... மேலும் பார்க்க

DY Chandrachud `நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனரா?'- சந்திரசூட் பதில்

"இந்தியாவின் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன." என்கிறார் சந்திரசூட். உச்ச நீதிமன்ற தலை... மேலும் பார்க்க

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

Unnatural Sex: `மனைவியுடன் ஒப்புதலற்ற இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல' - நீதிமன்றம் சொல்வதென்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவால் பெரிட்டோனிடிஸ், மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைய... மேலும் பார்க்க

கலாஷேத்ரா பாலியல் புகார்: "விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட... மேலும் பார்க்க