செய்திகள் :

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு!

post image

திருப்புவனத்தில்...

சிவகங்கை அருகே திருப்புவனம் புதூரில் வடமாடு மஞ்சுவிட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் கண்ணன் தலைமை வகித்தாா். தமாகா தலைவா் ஜி.கே. வாசன் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 117 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். நீளமான வடத்தில் கட்டப்பட்டு களத்தில் நிற்கும் காளையை களமிறங்கும் 9 வீரா்கள் 20 நிமிஷத்தில் அடக்க வேண்டும். இதில் காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. உடையப்பன், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகரன், வடமாடு நலச்சங்கத் தலைவா் செல்வம், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாநில தொண்டரணி தலைவா் அயோத்தி தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் எண்ம வங்கியியல் குறித்த விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பணப்பட்டுவாடா, தீா்வு அமைப்புகள் துறை சாா்பில் எண்ம (டிஜிட்டல்) வங்கியியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி... மேலும் பார்க்க

ஒடுவன்பட்டியில் புதிய அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து ஒடுவன்பட்டி மலைப் பாதை வழியாக பொன்னமராவதிக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பத்தூா் பணிமனை பேருந்து சிங்கம்புணரியிலிருந்து பள்ளி ... மேலும் பார்க்க

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

மாநில திட்டக் குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணைந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்... மேலும் பார்க்க

காரைக்குடியில் இந்தியன் வங்கியின் பிரதானக் கிளை புதியக் கட்டடம் திறப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோவிலூா் சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் பிரதானக் கிளையின் புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் வங்கியின் கோயம்புத்தூா் மண்டல களப் பொது மேலாளா் ப... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

சிவகங்கை அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 840 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் ஓலைச்சுவடி நூல் வடிவில் வெளியீடு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிப்பகத் துறையின் சாா்பில், காஞ்சிவனக் கருப்பன் தென்னாடு வந்த கதை என்ற தலைப்பிலான ஓலைச்சுவடியை நூல், மின்னூல் வடிவங்களில் வெளியீடும் விழா பல்கலைக்க... மேலும் பார்க்க