செய்திகள் :

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

post image

எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தில்லியில் என்ஹெச்ஆர்சி சார்பில் "டிஜிட்டல் காலத்தில் தன்மறைப்பு நிலை மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் என்ஹெச்ஆர்சி தலைவர் வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "டிஜிட்டல் உலகில் தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தன்மறைப்பு நிலை பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் குறைபாடுகள் இருக்கக் கூடாது. புதுமையான கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, ஒருவரின் தன்மறைப்பு நிலை ஆகியவற்றை சமநிலையுடன் கையாளும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு டிஜிட்டல் உரிமைகள், நிறுவனங்கள் பொறுப்பேற்பது ஆகியவை குறித்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவிப்பதில் என்ஹெச்ஆர்சி உறுதியாக உள்ளது' என்றார்.

என்ஹெச்ஆர்சி உறுப்பினரும் முன்னாள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான வித்யுத் ரஞ்சன் சாரங்கி பேசுகையில், "டிஜிட்டல் பயன்பாடு குறித்துப் பொதுமக்கள் பலருக்குத் தெரியவில்லை. அவர்கள் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த பிறரைச் சார்ந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே சாமானியர்கள் டிஜிட்டல் முறையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை அதிகரிக்க, அந்தத் தொழில்நுட்ப நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்' என்றார்.

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க