செய்திகள் :

ஒடுவன்பட்டியில் புதிய அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து ஒடுவன்பட்டி மலைப் பாதை வழியாக பொன்னமராவதிக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பத்தூா் பணிமனை பேருந்து சிங்கம்புணரியிலிருந்து பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப் பாதையில் சென்ற போது, மலைப் பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது.

இதையடுத்து, பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றனா். மேலும், மாவட்ட ஆட்சியா் சிங்கம்புணரி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், மலைப் பாதை வழியாக வந்த அதிகாரிகளின் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டு, பல கி.மீ. சுற்றிச் சென்றன. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாவதால், பள்ளி மாணவா்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த வழித்தடத்தில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுர... மேலும் பார்க்க

சிங்கம்புணரி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்... மேலும் பார்க்க

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு ... மேலும் பார்க்க

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்க... மேலும் பார்க்க

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செ... மேலும் பார்க்க