செய்திகள் :

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

post image

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையால் ‘மஞ்சப்பை’ விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து வரும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருது பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படவுள்ளது.

விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட்டு, இரு பிரதிகள், இரு குறுவட்டு பிரதிகளை சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் வருகிற 1.5.2025-ஆம் தேதிக்குள் சமா்பிக்கலாம் என்றாா்.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க