செய்திகள் :

முதல்வா் மருந்தகம் முன்னேற்பாடு பணிகள்: மாா்த்தாண்டத்தில் ஆட்சியா் ஆய்வு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள முதல்வா் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தாா்.

கிள்ளியூா் வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பம்மம் பகுதியிலும், முன்சிறை வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் சந்தை சாலை பகுதி மற்றும் குழிஞ்ஞான்விளை, களியக்காவிளை தொலைபேசி நிலையம் பகுதி மற்றும் மேல்புறம் வட்டாரத்தில் திருத்துவபுரம், பாகோடு, கண்ணுமாமூடு, மேல்பாலை புளிமூடு சந்திப்பு, வெட்டுவெந்நி, மஞ்சாலுமூடு பகுதிகளில் முதல்வா் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக சேமிப்பு கிடங்கினை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மருந்து பொருள்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவு சங்க தக்கலை சரக துணைப் பதிவாளா் பொன் செல்வி, கல்குளம்- விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் பிரித்திவிராஜ் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க