செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

நமது நிருபர்

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த், என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஜன.3- ஆம் தேதி மத்திய அரசால் மீண்டும் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் தலைவர், ஒரு வாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாடு எழுப்பிய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்' என்று தெரிவித்தது.

நீதிபதிகள் கூறியதாவது: மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபார்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இணக்கமாகத் தீர்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றம் அதுகுறித்து தீர்ப்பளிக்கும்.

நடப்பாண்டு ஜன.3-ஆம் தேதி ஒரு புதிய மேற்பார்வைக் குழு அதன் தலைவருடன் நியமிக்கப்பட்டதாக எங்களுக்குத் தோன்றுகிறது. அக்குழு தமிழகத்தின் கோரிக்கைகளை ஆராய்ந்து, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.

இருப்பினும், ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், விடுபட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையில் இணக்கமான வகையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இரண்டு மாநிலங்களுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதியின் நலனுக்காக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஆகவே, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, பொருத்தமான அமர்வின் முன் பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதியின் முன் இந்த விவகாரத்தை வைக்க உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த அசல் வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியது.

அணை விவகாரத்தில் 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. நீர்மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், அணையின் கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும், அவ்வப்போது அதன் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

அணை எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று தமிழ்நாடு வாதிட்டபோதிலும், அது பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் அதிக நீர்மட்டம் காரணமாக உடைப்பு ஏற்பட்டால் கீழ்ப்பகுதியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறி, அதை அகற்ற உத்தரவிட கேரள அரசு கோரி வருகிறது.

ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்

மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். உலக தாய்மொழி தினத்தையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் ... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க