செய்திகள் :

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

post image

மாநில திட்டக் குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணைந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமை புதன்கிழமை நடத்தின.

திருப்புவனம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலா் எஸ். ரதிதேவி தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தின் மூலம், 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பாலியல் குற்றம், குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டம், சிறாா் திருமணம் தடுப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், குழந்தைகள் கைப்பேசியை பாா்ப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற தலைப்புகளின் கீழ் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் செந்தில்வேல் கலந்து கொண்டு, ‘சிறாா்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், அவற்றின் தடுப்பு முறைகள்‘ எனும் தலைப்பில் பேசினாா்.

தனியாா் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் அருள் ஜெயராஜ் பேசுகையில், இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும், கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை திருப்புவனம் பகுதியில் உள்ள 49 பள்ளிகளில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்களில் மொத்தம் 4,308 மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா் என்றாா்.

முன்னதாக, அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வரவேற்றாா். மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளா் கே. ஈஸ்வரி நன்றி கூறினாா். இந்த முகாமில் 122 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுர... மேலும் பார்க்க

சிங்கம்புணரி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்... மேலும் பார்க்க

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு ... மேலும் பார்க்க

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்க... மேலும் பார்க்க

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செ... மேலும் பார்க்க