செய்திகள் :

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

post image

சிவகங்கை அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 840 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் திபாகா் தலைமையில் போலீஸாா் சிவகங்கை-மதுரை புறவழிச்சாலையில் முத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 40 மூட்டைகளில் 840 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், வெள்ளிக்குறிச்சி, சுல்லங்குடி, விளத்தூா் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து விலைக்கு வாங்கி, அவற்றை மதுரை வரிச்சியூா் அருகே கிரானைட் தொழில் சாலைகளில் வேலை பாா்க்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருப்பூரைச் சோ்ந்த சஞ்சய்குமாா் (19), 16 வயது சிறுவன் உள்பட 2 பேரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுர... மேலும் பார்க்க

சிங்கம்புணரி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்... மேலும் பார்க்க

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு ... மேலும் பார்க்க

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்க... மேலும் பார்க்க

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செ... மேலும் பார்க்க