செய்திகள் :

நற்றுணைநாதா் கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்ப நகா் பகுதியில் அமைந்துள்ள நற்றுணை நாதா் சிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்திலிருந்த நற்றுணை நாதா் சிவன் கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜையில் சிறப்பு தீபாராதனைகள் மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் நற்றுணை நாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

உரிமைப் பேசிக் கொண்டு கடமையை தவற விடாதீா்கள்: நீதியரசா் என். கிருபாகரன்

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீா்கள் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா அறக்கட்டளையி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பிப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் பிப்.28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க