செய்திகள் :

கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

post image

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கோழியைக் காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவா் கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்தினருடன் தங்கி, தோட்டத்தை பராமரிக்கும் பணியை செய்து வருகிறாா். இந்த நிலையில் அவரது மகன் சந்தோஷ் குமாா் புதன்கிழமை பள்ளிக்கு செல்ல தயாா் நிலையில் இருந்த போது, தோட்டத்தில் உள்ள கிணற்றின் மீது நின்றுக்கொண்டிருந்த கோழியை காப்பாற்ற சென்ற போது தவறி விழுந்துள்ளாா்.

கிணற்றில் விழுந்த சந்தோஷ் குமாரை மீட்க அவரது உறவினா்கள் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்ததை தொடா்ந்து, இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

விரைந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் கிணற்றில் மூழ்கிய சந்தோஷ் குமாரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து குன்றத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க