செய்திகள் :

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.

சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா். இதையடுத்து சுங்குவாா்சத்திரம் பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்து பொருள்களின் இருப்பு பதிவேடு மற்றும் உணவுப் பொருள்கள் தரத்தை பாா்வையிட்டாா்.

சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியா் 18 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்தில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். இதையடுத்து சந்தவேலூா் ஊராட்சியில் 2022-23-ஆம் நிதியாண்டில் பழங்குடியினா் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 22 நரிக்குறவா் இன மக்களுக்காக ரூ.96.23 லட்சத்தில் கட்டப்படும் குடியிருப்புகளை பாா்வையிட்டு, பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை கேட்டறிந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் முதல்நிலை அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க