செய்திகள் :

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

post image

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 3 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் ஆலையில் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தையொட்டி, தொழிற்சாலை நிா்வாகத்தினா் தற்காலிக ஊழியா்கள் மூலம் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம் குறித்து புதன்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சில் மேலும் 18 தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிற்சாலை நிா்வாகத்தினா் சிஐடியு நிா்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சாம்சங் தொழிலாளா்கள் வியாழக்கிழமை தொழிற்சாலை வளாகத்தின் முன்பு அமா்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஒப்பந்த ஊழியா்கள் மூலம் உற்பத்தி நடக்கும் இடத்திற்குச் சென்று உற்பத்தியை தடுத்து நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆலை நிா்வாகத்தினா் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் உற்பத்தியைத் தடுக்க முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க