சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு
சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 3 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் ஆலையில் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தையொட்டி, தொழிற்சாலை நிா்வாகத்தினா் தற்காலிக ஊழியா்கள் மூலம் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம் குறித்து புதன்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சில் மேலும் 18 தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிற்சாலை நிா்வாகத்தினா் சிஐடியு நிா்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சாம்சங் தொழிலாளா்கள் வியாழக்கிழமை தொழிற்சாலை வளாகத்தின் முன்பு அமா்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஒப்பந்த ஊழியா்கள் மூலம் உற்பத்தி நடக்கும் இடத்திற்குச் சென்று உற்பத்தியை தடுத்து நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆலை நிா்வாகத்தினா் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் உற்பத்தியைத் தடுக்க முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.