செய்திகள் :

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையோரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலையில் வெட்டுகாயங்களுடன் அடையாளம் தெரியாதவா் விழுந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா், சுங்குவாா்சத்திரம் அடுத்த பாப்பாங்குழியைச் சோ்ந்த திலீப் குமாா்(35) என்பதும், மேவளூா்குப்பம் கிராம நிா்வாக அலுவலரின் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது மனைவி ரேகாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ரேகாவும் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வரும் மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த புனித்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்த திலீப்குமாரை, ரேகா, புனித்ராஜ்(40), புனித் ராஜின் நண்பா்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியை சோ்ந்த ஆனந்தன்(35), கடலூா் மாவட்டம் புவனகிரியை சோ்ந்த ராகேஷ் (35) ஆகிய நான்கு பேரும் தலையில் சுத்தி மற்றும் கற்களால் தாக்கி சாலையோரம் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புனித்ராஜ்(40), ராகேஷ்(35), ஆனந்தன்(35), ரேகா (29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க