செய்திகள் :

DY Chandrachud `நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனரா?'- சந்திரசூட் பதில்

post image

"இந்தியாவின் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன." என்கிறார் சந்திரசூட்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட், சமீபத்தில் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருக்கும் பாலியல் விகிதம் குறித்தும்... குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த இந்து ஆண்களே தொடர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சந்திரசூட், "இந்த அதிகார பிரமிடின் அடித்தளமாக விளங்கும் மாவட்ட நீதித்துறைக்கான புதிய ஆட்சேர்ப்பில் 50% வரை பெண்கள் இருக்கின்றனர். சில மாநிலங்களில் 60 முதல் 70% வரை பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நீதிபதி சந்திரசூட்

இதற்கு காரணம் தற்போது சட்டப்படிப்பு பெண்களைச் சென்றடைந்துள்ளது. சட்டக் கல்லூரிகளில் காணும் பாலின சமநிலை, நீதித்துறையின் அடித்தளத்தில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. மாவட்ட நீதித்துறை பொறுப்புகளை அடைந்துள்ள பெண்கள், மேலும் முன்னேறுவார்கள்." என பதிலளித்தார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதின் மகனாக இருப்பது குறித்த கேள்விக்கு, தனது தந்தை தலைமை நீதிபதியாக இருந்தவரை தன்னை அவர் நீதிமன்றம் செல்லக் கூடாது எனத் தடுத்ததாகக் கூறியுள்ளார். "அதனால்தான் நான் 3 ஆண்டுகள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்கு சென்று படித்தேன். அப்பா ஓய்வுபெற்ற பிறகே நீதிமன்றத்துக்கு சென்றேன்.

நீங்கள் நீதித்துறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முதல் தலைமுறையாக சட்டத்துறைக்கு வருபவர்களே அதிகம் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் இருக்கின்றனர்.

நீங்கள் சொல்வதற்கு மாற்றாக, நீதித்துறையில் குறிப்பிட்ட சாதியினரோ, நீதித்துறையில் உயர்மட்ட பதவியில் இருந்தவர்களோ அதிகாரம் செலுத்தவில்லை. பெண்கள் மிகுந்த பொறுப்புள்ள பதவிகளை அடைந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார்.

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் ... மேலும் பார்க்க

நீதிபதிகள் நியமனம்: ``RSS பின்புலம் இருப்பவர்கள்தான்..'' -ஓய்வுபெற்ற நீதிபதிகள் கவலை!

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனம் முறையாக நடபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபந்தாமன் ஆகியோர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை... மேலும் பார்க்க

`மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ - தாது மணல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி

கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல ... மேலும் பார்க்க

Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?

ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது... எனது' என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. விருது யாரு... மேலும் பார்க்க

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப... மேலும் பார்க்க

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள்... மேலும் பார்க்க