செய்திகள் :

`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்

post image

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து இடைக்கால நிவாரணமாக மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதோடு வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு, உறவு தகாத தொடர்பாகாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி அலுவாலியா, ''தகாத உறவு என்பதன் அர்த்தம் திருமணம் தாண்டி வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகும். அதேசமயம் ஒரு மனைவி கணவனை தவிர்த்து வேறு ஒருவருடன் தாம்பத்திய உறவு இல்லாமல், காதல் மற்றும் நெருக்கம் காட்டுவது தகாத தொடர்பாகாது. அப்படிப்பட்ட மனைவி தகாத உறவில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. 144(5) மற்றும் 125(4) வது சட்டப்பிரிவுகள் ஒரு மனைவி திருமணம் மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு ஜீவனாம்சம் கொடுப்பதைச் சட்டம் தடுக்கிறது. உடல் ரீதியிலான தொடர்பு இல்லாத நிலையில் அதனை தகர்த்த தொடர்பாகக் கூற முடியாது என்று குடும்ப நீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்கிறது.

மனுதாரர் தனது மனுவில், தான் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்வதாகவும், 8 ஆயிரம் மட்டும் சம்பளம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது மனைவி இந்து திருமண சட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், பியூட்டி பார்லர் நடத்தி அதிலும் சம்பாதிப்பதாகவும், குடும்ப நீதிமன்றம் தெரிவித்தபடி தான் 4 ஆயிரம் கொடுத்தால் தனது சம்பளத்தை விட... மனைவியின் வருமானம் அதிகமாகிவிடும் என்று குறிப்பிட்டுருகிறார். ஆனால் அவரது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதோடு மனுதாரர் கொடுத்திருக்கும் சம்பள சிலிப் எப்போது எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் ... மேலும் பார்க்க

நீதிபதிகள் நியமனம்: ``RSS பின்புலம் இருப்பவர்கள்தான்..'' -ஓய்வுபெற்ற நீதிபதிகள் கவலை!

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனம் முறையாக நடபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபந்தாமன் ஆகியோர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை... மேலும் பார்க்க

`மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ - தாது மணல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி

கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல ... மேலும் பார்க்க

Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?

ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது... எனது' என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. விருது யாரு... மேலும் பார்க்க

DY Chandrachud `நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனரா?'- சந்திரசூட் பதில்

"இந்தியாவின் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன." என்கிறார் சந்திரசூட். உச்ச நீதிமன்ற தலை... மேலும் பார்க்க

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள்... மேலும் பார்க்க