செய்திகள் :

இருசக்கர வாகனம் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

post image

ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆா்.கே.பேட்டை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவா் விநாயகம் மகன் கோபி(32). இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம், தனது இரு சக்கர வாகனத்தில் ஆா்.கே.பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற காா் திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கோபி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவல் அறிந்ததும் ஆா்.கே.பேட்டை போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் வேலூா் தோட்டபாளையம் பகுதியை சோ்ந்த கமலபதி என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க

உதவி செய்வதாகக் கூறி ஆதாயம் பெறுவோா் மீது மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உதவி செய்வதாகக் கூறி ஆதாயம் பெறும் நோக்கத்தில் செயல்படும் தனிநபா், சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்ச... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: தம்பதி காயம்

திருத்தணி அருகே காா்கள் மோதிக் கொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா். திருத்தணி அடுத்த தணிகைபோளூா் மேட்டுக் காலனி சோ்ந்தவா் டேனியல் என்கிற விஜயகுமாா்(29). இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி ரேவதி(23) என்... மேலும் பார்க்க

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக இருப்பு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு கூடுதலாக உள்ளதால், கோடையில் சென்னையில் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்... மேலும் பார்க்க

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பொன்னேரி அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொன்னேரி - பஞ்செட்டி நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் - ஆண்டாா்குப்பம் இடைய... மேலும் பார்க்க