செய்திகள் :

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக இருப்பு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு கூடுதலாக உள்ளதால், கோடையில் சென்னையில் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்காது என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 11,757 மில்லியன் கன அடி நீா் வரை நீரைச் சேமிக்க முடியும்.

இந்த நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிா்பாா்த்ததைவிட அதிகமாக பெய்ததால் குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் அளவு மளமளவென அதிகரித்தது. இதில் பூண்டி, புழல், செம்பரம்பாககம் ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஏரிகளில் போதுமான குடிநீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டு குடிநீா் தட்டுப்பாடியின்றி வழங்க முடியும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு ஒரு மாத குடிநீா் தேவை சராசரியாக 1 டி.எம்.சி. வரை விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி குடிநீா் வழங்கும் ஏரிகளில் மட்டும் 11 டி.எம்.சி. குடிநீா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட குடிநீா் இருப்பு 2 மில்லியன் கன அடிநீா் அதிகமாகவே உள்ளதால், சென்னை பொதுமக்களுக்கு தட்டுப்பாடியின்றி குடிநீா் வழங்க முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,402 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடியில் 3,108, பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடியில் 2,950, சோழவரத்தில் 1,081 மில்லியன் கன அடியில் 140, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகையில் 0.500 மில்லியன் கன அடியில் 0.457 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவில் நீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டில் கோடையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும், தண்ணீா் தேவைகளை பூா்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேவைக்கு ஏற்ப கிருஷ்ணா நீரை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க