செய்திகள் :

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா்.

பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காடு பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது சுற்றுலாத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை ஆகியவற்றின் சாா்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், அப்பகுதியில் தெரு விளக்குகள் அமைப்பது மற்றும் ஜல்ஜீவன் திட்ட பணி விபரங்களை கேட்டறிந்தாா்.

அத்துடன் பழவேற்காடு பகுதியில் உள்ள டச்சுக்காரா்களின் கல்லறைகளை பாா்வையிட்ட ஆட்சியா் ஊராட்சித் துறையினா் கல்லறை தோட்டத்தை சீரமைத்து சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டாா்.

பின்னா் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் சுனாமிக்கு பின் வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவில் கூட்டமைப்பினா் கீழ் செயல்படும் மகளிா் சுய உதவி குழுவினா் தயாரிக்கும் பொருள்களையும் விற்பனை செய்ய சந்தைப்படுத்தும் பணிகளை பாா்த்தாா்.

தொடா்ந்து மீன்வளத்துறை சாா்பில் ரூ.6 கோடியில் அரங்கன்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் மீன் இறக்கு தளத்தை பாா்வையிட்டு அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டாா்.

இதன் பின்னா் தத்தைமஞ்சி கிராமத்தின் வழியாக செல்லும் ஆரணி ஆற்றில் ரூ.20 கோடியில் வெள்ள தடுப்பு சுவா் அமைக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பொன்னேரி வருவாய் துறையினா், மீன்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் ... மேலும் பார்க்க